இயற்கையாக அமைந்த கூட்டணி; அடுத்த கூட்டத்தில் பெயர் அறிவிப்பு! நிர்மல் குமார் பேட்டி
கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என நிர்மல் குமார் பேசியுள்ளது குறித்து...
தவெக தோழமை கட்சிகளுடன் அமைந்த கூட்டணி இயற்கையானது என சட்டம் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் இன்று (ஜூலை 1) தெரிவித்தார்.
தவெக தோழமை கட்சிகள் ஆலோசனை கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் கோவளத்தில் இன்று (ஜூலை 1) நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுடன் நிர்மல் குமார் பேசியதாவது:
Advertisement
Advertisement
''தவெக தலைமையில் புதிய கூட்டணி அமைந்துவிட்டது. தவெக அரசில் அங்கம் வகித்துவரும் கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்றன.
தவெக அரசு தொடர வேண்டும் என்று கூட்டத்தில் அவர்கள் ஆதரவு தெரிவித்தனர். கூட்டணிக்கு ஒருங்கிணைப்பாளர் ஒருவரை நியமிக்க தவெக திட்டமிட்டுள்ளது. விரைவில் அது குறித்து அறிவிக்கப்படும்.
கருத்து வேறுபாடு இன்றி இந்த கூட்டணி அமைந்துள்ளது. இயற்கையாக அமைந்திருக்கும் கூட்டணி.
கூட்டணிக்கான பெயர் குறித்து அடுத்த கூட்டத்தில் ஆலோசனை செய்து முடிவு செய்யப்படும்'' எனக் குறிப்பிட்டார்.
A natural alliance! Nirmal Kumar speaks to the press after the consultation
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.