முகப்பு
இந்தியா

அசாம்-நாகாலாந்து ஆளுநர் ஜெகதீஷ் முக்கிக்கு கரோனா

அசாம்-நாகாலாந்து ஆளுநர் ஜெகதீஷ் முக்கிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:07 AM
பகிர்:

அசாம்-நாகாலாந்து ஆளுநர் ஜெகதீஷ் முக்கிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதையடுத்து குவாஹட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவரது உடல்நிலை சீராக உள்ளதாக ஆளுநர் மாளிகை தரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.

ஆளுநரைத் தொடர்ந்து அவரது மனைவிக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் ராஜபவனில் தன்னை தனிமைப்படுத்திகொண்டுள்ளார்.

இதனிடையே ஆளுநர் ஜெகதீஷ் முக்கி விரைவில் குணமடைய பிராத்திப்பதாக அசாம் முதல்வராக ஹிமந்தா பிஸ்வா தெரிவித்துள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.