இந்தியா

காஷ்மீர்: 3 பயங்கரவாதிகள் கைது

DIN

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் லக்‌ஷர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்தாண்டு தொடக்கத்திலிருந்து காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால், கடந்த ஜன.1 முதல் இதுவரை அம்மாநிலத்தில் 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், காஷ்மீரின் தார்போரா பகுதியில் லக்‌ஷர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 கைத்துப்பாக்கிகள், தோட்டாக்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐரோப்பாவில் சாய்னா!

நாளொரு வண்ணம்..!

திருச்சியில் இருந்து தாம்பரத்திற்கு இன்றிரவு முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

விரைவில் சூர்யா - 44 பெயர் டீசர்!

இந்தியா-வங்கதேச எல்லையில் ரூ.12 கோடி தங்கக் கட்டிகள் பறிமுதல்

SCROLL FOR NEXT