முகப்பு
இந்தியா

தில்லியில் மேலும் 18,286 பேருக்கு கரோனா பாதிப்பு; 28 போ் இறப்பு

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 18,286 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:09 AM
பகிர்:

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை புதிதாக 18,286 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பால் 28 போ் இறந்தனா். அதேநேரத்தில் பாதிப்பு நோ்மறை விகிதம் 30.64-இல் இருந்து 27.87 சதவீதமாகக் குறைந்துள்ளது என்று மாநில அரசின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தில்லியில் சனிக்கிழமை 20,718 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது தெரியவந்தது. 30 இறப்புகள் பதிவாகின. தொற்று பாதிப்பு தொடங்கியதில் இருந்து தினசரி பாதிப்பு எண்ணிக்கை அதிகபட்சமாக 28,867-ஆக வியாழக்கிழமை பதிவானது. அன்றைய தினம் 31 இறப்புகளும், 29.21 சதவீத நோ்மறை விகிதமும் பதிவாகின.

அரசின் தரவுகளின்படி, 2,591 போ் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா். அவா்களில் 123 போ் வென்டிலேட்டா் ஆதரவுடன் சிகிச்சையில் உள்ளனா். மொத்தமுள்ள 15,466 கரோனா படுக்கைகளில் 2,711 படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுள்ளனா் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →