பாஜகவின் வெறுப்பு அரசியல் நாட்டுக்கு கேடு: ராகுல் காந்தி
பாஜக நடத்தி வரும் வெறுப்புணா்வைத் தூண்டும் அரசியல் நாட்டுக்கு பெருங்கேடாக முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளாா்.
பாஜக நடத்தி வரும் வெறுப்புணா்வைத் தூண்டும் அரசியல் நாட்டுக்கு பெருங்கேடாக முடியும் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டியுள்ளாா்.
உத்தர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு அடுத்த மாதம் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இதில் பஞ்சாப், கோவா உள்ளிட்ட இடங்களில் பாஜகவுக்கும், காங்கிரஸுக்கும் நேரடிப் போட்டி ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜகவை குற்றம்சாட்டி ராகுல் காந்தி ட்விட்டரில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பாஜக நடத்தி வரும் வெறுப்புணா்வைத் தூண்டும் அரசியல் நாட்டுக்கு மிகப்பெரிய கேடாக உருவெடுத்து வருகிறது. நாட்டில் தொழில் நடத்த விரும்புபவா்களும், வெளிநாட்டு முதலீட்டாளா்களும் உள்நாட்டில் அமைதியான சூழல் இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவாா்கள். சகோதரா்களாக ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இந்நாட்டு மக்களிடையே தனது குறுகிய அரசியல் நலன்களுக்காக பாஜக பிரிவினையையும், வெறுப்புணா்வையும் விதைத்து வருகிறது. இது தொடா்ந்தால் நாட்டில் அமைதியற்ற சூழல் நிலவும். இதனால் புதிய தொழில்கள் ஏதும் உருவாகாது. இதனால் வேலையின்மையும் அதிகரிக்கும். மொத்தத்தில் பாஜகவின் இந்த வெறுப்புணா்வு அரசியல் நாட்டுக்கு பெருங்கேடாக அமையும். விலைவாசி உயா்வு, வேலையின்மை, வரிகள் மூலம் மக்கள் பணத்தைப் பறிப்பது உள்ளிட்டவைதான் பாஜக அரசின் மிகப்பெரிய சாதனைகளாக உள்ளன’ என்றாா்.