ஒடிசா மாநிலத்தில் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை கடந்த 24 மணி நேரத்தில் 10 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில்,
மாநிலத்தில் இன்றைய பாதிப்பு 10,489 ஆகப் பதிவாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 11,44,401 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 3 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 8,484 பேர் தொற்றுக்கு இறந்துள்ளனர்.
ஒரேநாளில் 70,117 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டதில் 14.96 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், குறைந்தது 982 குழந்தைகள் தொற்றுக்குப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் 2,500-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் உள்ள மாவட்டங்கள் சிவப்பு மண்டலத்திலும், 1000 பேர் பாதிப்பு உள்ள மாவட்டங்கள் மஞ்சள் மண்டலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.