இந்தியா

சர்வதேச விமான சேவைக்கான தடை பிப். 28 வரை நீட்டிப்பு: மத்திய அரசு

DIN

சர்வதேச விமானப் போக்குவரத்துக்கான தடை பிப்ரவரி 28ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் புதன்கிழமை அறிவித்துள்ளது.

கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சர்வதேச விமான போக்குவரத்திற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது ஒமைக்ரான் கரோனா பரவல் அதிகரிக்கும் நிலையில் டிசம்பர் 15ஆம் தேதி முதல் சர்வதேச விமானப் போக்குவரத்து தொடங்கும் என அறிவிக்கப்பட்ட உத்தரவை மத்திய அரசு ஒத்திவைத்து ஜனவரி 2022 வரை தடை நீடிக்கும் என தெரிவித்திருந்தது.

இந்நிலையில் விமான போக்குவரத்து அமைச்சகம் இன்று வெளியிட்ட செய்தியில்,

சர்வதேச பயணிகள் விமான சேவைக்கான தடை 2022 பிப்ரவரி 28ஆம் தேதி நள்ளிரவு 11.59 வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. அதேசமயம் விமான கட்டுப்பாட்டரகத்தால் அங்கீகரிக்கப்பட்ட சில சேவைகள் மட்டும் அனுமதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேஷன் கடையை மாற்றக் கோரி பொதுமக்கள் போராட்டம்

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

SCROLL FOR NEXT