முகப்பு
இந்தியா

காஷ்மீர்: லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி கைது

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த  பயங்கரவாதியை காவல்துறையினர் கைது செய்தனர்.

Updated On : 20 ஜனவரி, 2022 at 3:58 PM
கோப்புப்படம்
பகிர்:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த  பயங்கரவாதியை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்தாண்டு தொடக்கத்திலிருந்து காஷ்மீர் மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் மற்றும் காவல்துறையினர் இணைந்து தீவிர தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதனால், கடந்த ஜன.1 முதல் இதுவரை அம்மாநிலத்தில் 17 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

Advertisement

இந்நிலையில், இன்று காஷ்மீரின் பட்கம் மாவட்டத்தில் லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த ஜஹாங்கிர் நாய்கோ என்கிற பயங்கரவாதியை காவல்துறையினர் கைது செய்தனர்.

முன்னதாக , கடந்த ஜன.15 ஆம் தேதி லஷ்கர்-ஏ-தொய்பா அமைப்பைச் சேர்ந்த 3 பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.