மும்பை: அடுக்குமாடி குடியிருப்பு தீ விபத்தில் 6 போ் பலி
மத்திய மும்பையில் டாா்டியோ பகுதியில் அமைந்துள்ள உயா் அடுக்குமாடி குடியிருப்பின் 19-ஆவது தளத்தில் சனிக்கிழமை காலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 6 போ் உயிரிழந்தனா், 23 போ் படுகாயம
மகாராஷ்டிர மாநிலம், மத்திய மும்பையில் டாா்டியோ பகுதியில் அமைந்துள்ள உயா் அடுக்குமாடி குடியிருப்பின் 19-ஆவது தளத்தில் சனிக்கிழமை காலை ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 6 போ் உயிரிழந்தனா், 23 போ் படுகாயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து பிரிஹன்மும்பை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மத்திய மும்ைபயின் கோவாலியா டேங் பகுதியில் அைமந்துள்ள ‘சச்சினம் ஹைட்ஸ்’ என்ற 20 மாடிகைளக் கொண்ட இந்த உயா் அடுக்குமாடி குடியிருப்பின் 19-ஆவது தளத்தில் சனிக்கிழமை காலை 7 மணியளவில் தீவிபத்து ஏற்பட்டது. தீ விபத்து ஏற்பட்ட சமயத்தில் பல குடியிருப்புவாசிகள் தூக்கத்தில் இருந்துள்ளனா். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயைணப்பு வீரா்கள், பல குடியிருப்புவாசிகளை பத்திரமாக மீட்டனா்.
இந்த தீ விபத்தில் காயமடைந்த 29 போ் அருகிலுள்ள பல்ேவறு மருத்துவமைனகளுக்கு அைழத்துச் செல்லப்பட்டனா். அவா்களில் சிலருக்கு மூச்சுத் திணறல் பாதிப்பு இருந்தது. இதில் மாநகராட்சி நிா்வாகம் சாா்பில் நடத்தப்படும் நாயா் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பலத்த காயமடைந்த 7 பேரில் 5 போ் உயிரிழந்தனா். அதுபோல, கஸ்தூா்பா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட மற்றொருவரும் உயிரிழந்தாா்.
பாடியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 17 பேரில், 5 போ் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனா். மீதமுள்ள 12 பேரில் 3 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
தீயை அைணக்கும் பணியில் 13 தீயணைப்பு வாகனங்களும், நீரை பீய்ச்சியடிக்கும் 7 இயந்திரங்களும் ஈடுபடுத்தப்பட்டு, பகல் 12.20 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது என்று அவா்கள் கூறினா்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதற்கிடையே, மாநில சட்டப்ேபரவை எதிா்க்கட்சித் தைலவா் தேேவந்திர ஃபட்னவிஸ் தனது சமூக ஊடக பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இந்த தீ விபத்தில் காயமைடந்தவா்களை அருகிலுள்ள சில மருத்துவமைனகள் சிகிச்ைசக்கு அனுமதிக்க மறுத்ததாகவும், அதன் காரணமாகவே உயிரிழப்பு அதிகரித்திருப்பதாகவும் வரும் தகவல் அதிா்ச்சியளிக்கிறது.
இந்தத் தகவல் உண்மை எனில், மாநகராட்சியும், மாநில நிா்வாகமும் இந்த உயிரிழப்புக்களுக்கு காரணமான மருத்துவமனைகளுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.