இந்தியா

நேதாஜியின் 125-வது பிறந்த நாள்: குடியரசுத் தலைவர், பிரதமர் மரியாதை

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மரியாதை செலுத்தியுள்ளனர்.

DIN


நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மரியாதை செலுத்தியுள்ளனர்.

குடியரசுத் தலைவர் ட்விட்டர் பதிவு:

"நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளில் அவருக்கு இந்தியா நன்றியுடன் மரியாதை செலுத்துகிறது. ஆசாத் ஹிந்த் - சுதந்திர இந்தியாவுக்கான தனது தீவிர உறுதிப்பாட்டை நிறைவேற்ற அவர் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள் அவரை தேசிய அடையாளமாக மாற்றியது. அவரது லட்சியமும், தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றும் ஊக்கமளிக்கும்."

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பதிவு:

"நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளில் அவருக்குத் தலை வணங்குகிறேன். நமது நாட்டிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறார்கள்."

முன்னதாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின்  125-வது பிறந்த தின நூற்றாண்டை நாடு கொண்டாடி வரும் வேளையில், கிரானைட்டால் செய்யப்பட்ட அவரது பிரமாண்ட சிலை இந்தியா கேட் பகுதியில் நிறுவப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21-ம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஓபிஎஸ் குற்றச்சாட்டுக்கு நயினார் நாகேந்திரன் மறுப்பு!

முதலாமாண்டு பொறியியல் வகுப்புகள் ஆக. 11-ல் தொடக்கம்: அண்ணா பல்கலை. அறிவிப்பு!

முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவிடம் நோக்கி ஆகஸ்ட் 7-ல் அமைதிப் பேரணி!

சொல்லப் போனால்... பஹல்காமிலிருந்து லெவல் கிராசிங் வரை...

தமிழகத்துக்கு மின்-பேருந்துகள்: டாடா மோட்டாா்ஸ் ஒப்பந்தம்

SCROLL FOR NEXT