இந்தியா

சிகிச்சையில் லாலு பிரசாத்: நேரில் நலம் விசாரித்த நிதீஷ் குமார்

DIN

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

பிகார் தலைநகர் பாட்னவில் உள்ள பாரஸ் மருத்துவமனைக்கு ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவரும் முதல்வருமான நிதீஷ் குமார் நேரில் சென்று லாலு பிரசாத் யாதவை சந்தித்தார். 

பின்னர் மருத்துவர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

கடந்த 3-ஆம் தேதி பாட்னாவில் உள்ள வீட்டின் மாடிப்படியிலிருந்து கீழே விழுந்ததால் அவரது லாலு பிரசாத் யாதவுக்கு தோள்பட்டையில் லேசான எலும்பு முறிவு, முதுகில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாட்னாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் லாலு அனுமதிக்கப்பட்டிருந்தார். 

யாதவின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாததால் அவரை சிகிச்சைக்காக தில்லிக்கு மாற்ற அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

ஹரியாணா: பேருந்து தீ பிடித்த விபத்தில் 9 போ் உயிரிழப்பு

SCROLL FOR NEXT