நேரில் நலம் விசாரித்த நிதீஷ் குமார் 
இந்தியா

சிகிச்சையில் லாலு பிரசாத்: நேரில் நலம் விசாரித்த நிதீஷ் குமார்

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர்லாலு பிரசாத் யாதவை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

DIN

உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் யாதவை பிகார் முதல்வர் நிதீஷ் குமார் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

பிகார் தலைநகர் பாட்னவில் உள்ள பாரஸ் மருத்துவமனைக்கு ஐக்கிய ஜனதா தள கட்சித் தலைவரும் முதல்வருமான நிதீஷ் குமார் நேரில் சென்று லாலு பிரசாத் யாதவை சந்தித்தார். 

பின்னர் மருத்துவர்கள் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் லாலு பிரசாத் யாதவின் உடல் நிலை குறித்து கேட்டறிந்தார்.

கடந்த 3-ஆம் தேதி பாட்னாவில் உள்ள வீட்டின் மாடிப்படியிலிருந்து கீழே விழுந்ததால் அவரது லாலு பிரசாத் யாதவுக்கு தோள்பட்டையில் லேசான எலும்பு முறிவு, முதுகில் காயம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து பாட்னாவிலுள்ள தனியார் மருத்துவமனையில் லாலு அனுமதிக்கப்பட்டிருந்தார். 

யாதவின் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லாததால் அவரை சிகிச்சைக்காக தில்லிக்கு மாற்ற அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT