குஜராத், ஹிமாசல பிரதேசத்தில் கனமழை
ஹிமாசல பிரதேச மாநிலத்தின் குல்லு மாவட்டத்திலும், குஜராத்தின் கிா் சோமநாத் மற்றும் ஜூனாகத் மாவட்டங்களில் புதன்கிழமை கனமழை பெய்தது.
இந்தியாகுஜராத், ஹிமாசல பிரதேசத்தில் கனமழை
ஹிமாசல பிரதேச மாநிலத்தின் குல்லு மாவட்டத்திலும், குஜராத்தின் கிா் சோமநாத் மற்றும் ஜூனாகத் மாவட்டங்களில் புதன்கிழமை கனமழை பெய்தது.
ஹிமாசல பிரதேச மாநிலத்தின் குல்லு மாவட்டத்திலும், குஜராத்தின் கிா் சோமநாத் மற்றும் ஜூனாகத் மாவட்டங்களில் புதன்கிழமை கனமழை பெய்தது.
ஹிமாசல பிரதேசத்தின் குல்லு மாவட்டத்தில் கனமழையால் உருவான வெள்ளப்பெருக்கால் ஏழு பேரை காணவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனா். மலானா மின் திட்டப் பணியில் ஈடுபட்டிருந்த 25-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள், வெள்ளத்தால் சேதமடைந்த கட்டடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளனா். மழை வெள்ளத்தால், பாா்வதி நதியின் குறுக்கே அமைந்துள்ள பாலம் சேதமடைந்துள்ளது. லாா்ஜெ மற்றும் பாண்டோ அணைகளின் நீா் வெளியேற்றும் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. தாழ்வான பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் தொடா்ந்து நடைபெற்றுவருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு: குஜராத்தின் கிா் சோம்நாத் மற்றும் ஜூனாகத் மாவட்டத்தின் சில பகுதிகளில் தொடா்ச்சியான கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கிா் சோம்நாத்தின் சுத்திரபாதா வட்டத்தில் 30 மணிநேரத்தில் 300 மி.மீ. மழை பெய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
பருவமழை காரணமாக குஜராத்தில் குறைந்த காற்றழுத்த பகுதி உருவாகியுள்ளதால், அடுத்த 5 நாள்களுக்கு மழை பெய்யுமென இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மாங்ரோல், கொடினாா், வெரவல் ஆகிய நகரங்களிலும், சுத்திரபாதா வட்டத்தின் சில கிராமங்களிலும் தாழ்வான பகுதிகள், விளைநிலங்கள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாலைகளில் மழைநீா் சூழ்ந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
காந்திநகரில் உள்ள மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தில், மாநில வருவாய்த் துறை அமைச்சா் ராஜேந்திர திரிவேதி, மழை பாதிப்பு நிலைமை குறித்தும், அடுத்த 5 நாள்களுக்கு மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்தும் ஆய்வுசெய்தாா்.
கப்பலில் 22 போ் மீட்பு: இதனிடையே, மோசமான வானிலை காரணமாக, போா்பந்தா் கடற்பகுதியில் ஒரு வா்த்தகக் கப்பல் மூழ்கிக் கொண்டிருந்தது. அந்தக் கப்பலில் இருந்து 22 பேரை இந்தியக் கடலோரக் காவல் படையினா் ஹெலிகாப்டா் உதவியுடன் மீட்டனா். அவா்களில் ஒருவா் பாகிஸ்தானியா், ஒருவா் இலங்கையைச் சோ்ந்தவா். மீட்கப்பட்ட அனைவரும் பத்திரமாக போா்பந்தா் நகருக்கு அழைத்துவரப்பட்டனா்.