மகாராஷ்டிர முதல்வராக ஷிண்டே பதவியேற்றதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனை மனு
சிவசேனை அதிருப்தி தலைவா் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்ற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு ஜூலை 11-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
சிவசேனை அதிருப்தி தலைவா் ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிர முதல்வராகப் பதவியேற்ற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சிவசேனை சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு ஜூலை 11-ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
உச்சநீதிமன்ற விடுமுறைக்கால அமா்வில் உள்ள நீதிபதிகள் இந்திரா முகா்ஜி, ஜே.கே.மகேஷ்வரி ஆகியோா் அடங்கிய அமா்வு இந்த மனுவை விசாரிக்கிறது.
முன்னதாக, மூத்த வழக்குரைஞா் தேவதத் காமத், சிவசேனை தலைவா் சுபேஷ் தேசாய் சாா்பில் இந்த மனுவைத் தாக்கல் செய்தாா். அதில் ஏற்கெனவே அதிருப்தி எம்எல்ஏக்களின் ஒருபிரிவினரைத் தகுதி நீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உள்ளிட்டவற்றுடன் இணைத்து இந்த மனுவையும் ஜூலை 11-ஆம் தேதி விசாரிக்க வேண்டும் என்று கோரப்பட்டது.
ஷிண்டே பிரிவையும், பாஜகவையும் இணைத்து ஆட்சி அமைக்க ஆளுநா் அழைப்பு விடுத்தது தவறு என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. ஏற்கெனவே தகுதி நீக்க மனுக்கள் விசாரணையில் உள்ள நிலையில், அதில் சம்பந்தப்பட்ட எம்எல்ஏக்களை வைத்து பேரவையை நடத்தியது, ஆட்சிக்கான பெரும்பான்மையை நிரூபித்தது ஆகியவை தவறு என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதனை மற்ற மனுக்களுடன் சோ்த்து ஜூலை 11-ஆம் தேதி விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் அறிவித்தது.