முகப்பு
இந்தியா

மத்தியப் பிரதேசத்தில் மின்னல் தாக்கி 3 தொழிலாளர்கள் பலி, 2 பேர் காயம்

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் கனமழையின் போது மின்னல் தாக்கியதில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர், இருவர் படுகாயமடைந்தனர். 

Updated On : 11 ஜூலை, 2022 at 2:31 PM
பகிர்:

மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் கனமழையின் போது மின்னல் தாக்கியதில் மூன்று தொழிலாளர்கள் உயிரிழந்தனர், இருவர் படுகாயமடைந்தனர். 

ஜெய்சிநகர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சேமாதானா கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை இந்த சம்பவம் நடந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கட்டுமானத்தில் உள்ள வீட்டில் ஐந்து தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர்.

Advertisement

கனமழை காரணமாக, ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் மின்னல் தாக்கியபோது, ​​அவர்கள் மரத்தின் அடியில் நின்றுகொண்டிருந்ததாக ஜெய்சிநகர் காவல் நிலையப் பொறுப்பாளர் ஷஷிகாந்த் குர்ஜார் தெரிவித்தார்.

அவர்களில் மோஹித் ரைக்வார் (30), சோட்டு ரைக்வார் (18) மற்றும் மகேந்திர சிங் (65) ஆகிய மூவரும் உயிரிழந்தனர். மேலும் இருவர் காயமடைந்து சாகர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.