முகப்பு
இந்தியா

பால்டால் வழியாக அமர்நாத் யாத்திரை செல்ல மீண்டும் அனுமதி

பால்டால் பாதை வழியாக அமர்நாத் யாத்திரை செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Updated On : 12 ஜூலை, 2022 at 1:19 PM
அமர்நாத் குகைக் கோவிலில் உள்ள பனி லிங்கத்தை தரிசிக்க வரும் திரளான பக்தர்கள்.
பகிர்:

பால்டால் பாதை வழியாக அமர்நாத் யாத்திரை செல்ல இன்று முதல் பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

ஜம்மு-காஷ்மீரின் அமர்நாத் அருகே ஜூலை 8-ம் தேதி ஏற்பட்ட மேகவெடிப்பு காரணமான 15-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். பலர் மாயமாகியுள்ளனர். இதனால் அமர்நாத் யாத்திரை, தொடர்ந்து நான்கு நாள்களாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

இந்நிலையில், தற்போது நிலைமை சீரடைந்ததையடுத்து, கந்தர்பால் மாவட்டத்தில் உள்ள பால்டால் மார்க்கத்திலிருந்து குகைக் கோயிலுக்குச் செல்ல இன்று முதல் அனுமதி அளிக்கப்படுகிறது. 

திங்களன்று பஹல்காம் பாதை வழியாக யாத்திரை மீண்டும் தொடங்கியது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.