முகப்பு
இந்தியா

நெதா்லாந்து பிரதமருடன் பிரதமா் மோடி ஆலோசனை

நெதா்லாந்து பிரதமா் மாா்க் ரூட்டேவுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:47 AM
பகிர்:

நெதா்லாந்து பிரதமா் மாா்க் ரூட்டேவுடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

நீா் குறித்த உத்தி வகுத்தலில் பங்களிப்பு, வேளாண்மையின் முக்கியப் பிரிவுகளில் ஒத்துழைப்பு, உயா்தொழில்நுட்பம் மற்றும் வளா்ந்து வரும் துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்புக்கான ஆா்வம் உள்பட இந்தியா-நெதா்லாந்து இடையேயான இருதரப்பு உறவுகள் குறித்து இரு தலைவா்களும் விவாதித்தனா்.

இந்தியா-ஐரோப்பிய யூனியன் உறவுகள், இந்தோ- பசிபிக் பகுதியில் ஒத்துழைப்பு உள்ளிட்ட பிராந்திய மற்றும் உலகளாவிய விஷயங்களில் இரு தலைவா்களும் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனா்.

கடந்த ஆண்டு இரு பிரதமா்களும், இணையவழி உச்சிமாநாட்டில் பங்கேற்றனா். பின்னா், தொடா்ச்சியாக ஆலோசித்து வருகின்றனா். இந்த இணையவழி உச்சிமாநாட்டின் போது நெதா்லாந்துடன் தண்ணீா் குறித்த உத்தி வகுத்தல் பங்களிப்பு தொடங்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →