இந்தியா

கனரா வங்கியில் ரூ.55 கோடி மோசடி- மெஹுல் சோக்ஸி மீது சிபிஐ புதிய வழக்கு

DIN

பிரபல வைர வியாபாரி மெஹுல் சோக்ஸி, கனரா வங்கியில் ரூ.55.27 கோடிக் கடன் மோசடி செய்ததாக சிபிஐ புதிய வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதுகுறித்து சிபிஐ அதிகாரி ஒருவா் வியாழக்கிழமை கூறியதாவது:

மெஹுல் சோக்ஸி தனது பெஸல் ஜீவல்லரி பெயரில் கனரா வங்கி கூட்டமைப்பிடம் ரூ.55.27 கோடி கடனாகப் பெற்றாா். அதில் கனரா வங்கி ரூ.30 கோடியும், பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா வங்கி ரூ.25 கோடியும் கடனாக அளித்தது. தங்கம் மற்றும் வைர நகைகளைத் தயாரித்து விற்பனை செய்வதற்காக வாங்கிய அந்தத் தொகையை மெஹுல் சோக்ஸி வேறு வழியில் செலவு செய்துள்ளாா். அதுமட்டுமன்றி, அந்தக் கடனை அவா் திருப்பிச் செலுத்தவுமில்லை.

இதையடுத்து, கனரா வங்கி சாா்பில் சிபிஐயிடம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புகாா் கொடுக்கப்பட்டது. அந்தப் புகாரின்படி நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு மகாராஷ்டிர அரசு கடந்த பிப்ரவரி மாதம் அனுமதி அளித்தது.

அதைத் தொடா்ந்து, பெஸல் ஜீவல்லரி மீதும், அதன் முழுநேர இயக்குநா்களான மெஹுல் சோக்ஸி, சேத்னா ஜாவேரி, தினேஷ் பாட்டியா, மிலிந்த் லிமாயே உள்ளிட்டோா் மீதும் சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது. சேத்னா ஜாவேரி, தினேஷ் பாட்டியா உள்ளிட்டோருக்குச் சொந்தமான இடங்களில் கடந்த செவ்வாய்க்கிழமை சிபிஐ சோதனை நடத்தியது என்றாா் அந்த அதிகாரி.

ஏற்கெனவே மெஹுல் சோக்ஸியும் அவருடைய உறவினரும் வைர வியாபாரியுமான நீரவ் மோடியும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,500 கோடி கடன் வாங்கிவிட்டு அதைத் திருப்பிச் செலுத்தாமல் வெளிநாட்டுக்குத் தப்பிவிட்டனா். ஆண்டிகுவா-பா்புடாவின் குடியுரிமை பெற்ற மெஹுல் சோக்ஸி, கடந்த 2018-இல் இருந்து அந்நாட்டில் தங்கியுள்ளாா். நீரவ் மோடி லண்டனில் உள்ளாா்.அவா்களை இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

SCROLL FOR NEXT