இந்தியா

நீட் தேர்வு தொடங்கியது

DIN


இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 17) பிற்பகல் தொடங்கியது. தமிழகத்தில் இத்தோ்வை 18 நகரங்களில் 1.42 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.

தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்பட 13 மொழிகளில் மாணவர்கள் இந்த தேர்வை எழுதுகின்றனர். பிற்பகல் 2 மணிக்கு தொடங்கிய இந்த தேர்வு மாலை 5.20 மணி வரை நடைபெறவுள்ளது.

நாடு முழுவதும் 497 நகரங்களில் இந்தத் தோ்வை 18.72 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதவுள்ளனா். தமிழகத்தில் இந்த ஆண்டு 1.42 லட்சம் மாணவ, மாணவிகள் விண்ணப்பித்துள்ளனா். அதில் 16 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.

தமிழகத்தைப் பொருத்தவரை சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவாரூா், திருச்சி, திருநெல்வேலி, வேலூா், செங்கல்பட்டு, விருதுநகா், திண்டுக்கல், திருப்பூா் என 18 நகரங்களில் தோ்வுகள் நடைபெறுகின்றன. சென்னையில் மட்டும் 31 மையங்களில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எழுதவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT