'நான் ஒன்றும் குற்றவாளியில்லை': சிங்கப்பூர் பயணம் குறித்து அரவிந்த் கேஜரிவால் 
இந்தியா

நான் ஒன்றும் குற்றவாளியில்லை: சிங்கப்பூர் பயணம் குறித்து அரவிந்த் கேஜரிவால்

சிங்கப்பூரில் நடைபெறும் உலக மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதி அளிப்பதில் தாமதம் அரசியல் பின்னணி கொண்டது என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி நிறுவனருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

ANI


புது தில்லி: சிங்கப்பூரில் நடைபெறும் உலக மாநாட்டில் கலந்துகொள்ள அனுமதி அளிப்பதில் தாமதம் அரசியல் பின்னணி கொண்டது என்று தில்லி முதல்வரும் ஆம் ஆத்மி நிறுவனருமான அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

நான் ஒன்றும் குற்றவாளியில்லை. இந்த நாட்டில் உள்ள ஒரு மாநிலத்தின், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர். சிங்கப்பூரில் நடைபெறும் உலக நகரங்கள் மாநாட்டில் பங்கேற்பதிலிருந்து என்னை தடுப்பதற்கு எந்த காரணம் இருக்கிறது என்பதை என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை. இந்த பயணத்தால் இந்தியாவுக்கு மேலும் சில பொலிவூட்டும் திட்டங்கள்தான் கிடைக்கும் என்று கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

சிங்கப்பூரில் நடைபெறும் உலக நகரங்கள் மாநாட்டில் பங்கேற்க வருமாறு அரவிந்த் கேஜரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்று அவரும் வருவதாக உறுதியளித்திருக்கும் நிலையில், தான் சிங்கப்பூர் பயணம் மேற்கொள்ள மத்திய அரசிடம் அனுமதி கேட்டிருந்தார்.

அதற்கு ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில், இது குறித்து நேற்று பிரதமர் நரேந்திர மோடியையும் அரவிந்த் கேஜரிவால் வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடகிழக்கு மாநிலங்களை ஒருங்கிணைக்கும் புதிய முயற்சி!

தில்லியில் காற்றின் தரம் கடந்த 7 ஆண்டுகளைவிட மேம்பட்டுள்ளது: அரசு அறிக்கை வெளியீடு

மிடில் கிளாஸ் டீசர்!

உலகக் கோப்பை வென்ற இந்திய அணியினரைச் சந்திக்கும் பிரதமர் மோடி!

உசே கெனா விடியோ பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT