முகப்பு
இந்தியா

எதிர்க்கட்சிகள் அமளி: இரு அவைகளும் நாளை வரை ஒத்திவைப்பு

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பணவீக்கம் உள்ளிட்டவைக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:49 AM
பகிர்:

ஜி.எஸ்.டி. வரி விதிப்பு, பணவீக்கம் உள்ளிட்டவைக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டதால் நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன.

நாடளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கியது. ஆகஸ்ட் 12 வரை நடைபெறவுள்ள கூட்டத்தொடரில் பல்வேறு மசோதாக்களை நிறைவேற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியவுடன் புதிதாக தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து, அவையின் பிற அலுவல்கள் தொடங்கியவுடன், அரிசி, தயிர் உள்ளிட்ட பண்டல் பொருள்களுக்கு விதிக்கப்பட்டுள்ள 5 சதவிகித ஜி.எஸ்.டி. வரியை திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடத் தொடங்கினர்.

மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் இருக்கைக்கு முன்பு நின்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டதால் நாளை காலை 11 மணிவரை அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதேபோல், மக்களவை இன்று காலை தொடங்கியவுடன் பிற்பகல் 2 மணிவரை குடியரசுத் தலைவர் தேர்தலில் உறுப்பினர்கள் வாக்களிப்பதற்காக அவை ஒத்திவைக்கப்பட்டது.

பிற்பகலில் அவை கூடியவுடன், ஜிஎஸ்டி வரி விதிப்பு, எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு எதிராக பதாகைகள் ஏந்தி முழக்கமிட்டனர். இதனால், மக்களவையும் நாள் முழுவதும் ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.

முழு கட்டுரையைப் படிக்க →