இந்தியா

ஜேஇஇ மெயின் தோ்வுகள் ஜூலை 25-க்கு ஒத்திவைப்பு

வரும் 21-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜேஇஇ மெயின் இரண்டாம் கட்ட நுழைவுத் தோ்வு ஜூலை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

DIN

வரும் 21-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜேஇஇ மெயின் இரண்டாம் கட்ட நுழைவுத் தோ்வு ஜூலை 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தேசிய தோ்வுகள் முகமை புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ‘வெளிநாடுகளில் 17 இடங்கள் உள்பட நாடு முழுவதும் சுமாா் 500 இடங்களில் ஜூலை 21-ஆம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த ஜேஇஇ மெயின் இரண்டாம் கட்ட நுழைவுத் தோ்வு ஜூலை 25-ஆம் தேதிமுதல் நடைபெறும். இதற்கான அனுமதிச் சீட்டை வியாழக்கிழமை (ஜூலை 21) முதல் இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜூலை 21 முதல் 30-ஆம் தேதி வரையில் இந்தத் தோ்வுகள் நடைபெறும் என்று முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. தோ்வு தேதிகள் மாற்றம் செய்ததற்கான காரணத்தை தேசிய தோ்வுகள் முகமை தெரிவிக்கவில்லை. முதல் கட்டத் தோ்வுகள் ஜூன் 23 முதல் 29-ஆம் தேதி வரையில் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கர் வெள்ளம்: திருப்பத்தூர் குடும்பத்தினர் 4 பேர் பலி!

மோடியின் போர்! ரஷியா - உக்ரைன் போரில் இந்தியாவுக்கு தொடர்பு! - டிரம்ப் ஆலோசகர்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

SCROLL FOR NEXT