இந்தியா

உ.பி.யில் மின்னல் தாக்கி 14 பேர் பலி: நிவாரணம் அறிவிப்பு

PTI

உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில் 14 பேர் உயிரிழந்தனர். 16 பேர் காயமடைந்தனர். 

மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நிவாரணத் தொகையாக தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளார். 

நிவாரணம் ஆணையர் அலுவலகம் வழங்கிய விவரங்களின்படி, மின்னல் தாக்கி பண்டாவில் 4 பேரும், பதேபூரில் 2 பேரும், பல்ராம்பூர், சந்தோலி, புலந்த்ஷாஹர், ரேபரேலி, அமேதி, கௌசாம்பி, சுல்தான்பூர் மற்றும் சித்ரகூட் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்த ஆதித்யநாத், காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

’இஸ்லாமியம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

காங்கிரஸ் - சமாஜ்வாதி வென்றால் ராமர் கோயிலை புல்டோசர் வைத்து இடிப்பார்கள்: மோடி

SCROLL FOR NEXT