இந்தியா

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மீண்டும் மூடல்

PTI


ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் பல இடங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. 

அமர்நாத் பயணிகளை ஏற்றிச் செல்லும் கான்வாய் பகுதியில் ஏறக்குறைய 1000 வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன. 

காஷ்மீரை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே நெடுஞ்சாலை இதுவாகும். மேலும், ராம்பான் மாவட்டத்தில் நான்கு இடங்களில் கற்கள், நிலச்சரிவுகளால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

கற்கள் உருண்டு விழுந்துள்ளதன் காரணமாக புதன்கிழமை இரவு முதல் மூர் ராம்பானில் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

காஷ்மீர் செல்லும் அமர்நாத் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கான்வாய் மற்றும் சித்ரகூட் மற்றும் நஷ்ரியில் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சாலையைச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னதாக நேற்று ஒருசில இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை சில மணி நேரம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளம்பருவத்தினர் இணையவழி குற்றங்களில் ஈடுபடாமல் தடுக்க சர்வதேச ஒத்துழைப்பு தேவை -தலைமை நீதிபதி

'ஜெயக்குமார் தனசிங் காலமான செய்தி கேட்டு மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்'

அரண்மனை - 4 முதல்நாள் வசூல்!

‘டாக்ஸிக்’ படத்தில் கரீனாவுக்கு பதிலாக நயன்தாரா?

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

SCROLL FOR NEXT