FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மீண்டும் மூடல்

ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் பல இடங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. 

1 பிப்ரவரி 2024, 3:21 pm IST
பகிர்:


ஜம்மு-காஷ்மீரின் ராம்பன் மாவட்டத்தில் பல இடங்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. 

அமர்நாத் பயணிகளை ஏற்றிச் செல்லும் கான்வாய் பகுதியில் ஏறக்குறைய 1000 வாகனங்கள் சிக்கித் தவிக்கின்றன. 

காஷ்மீரை நாட்டின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் ஒரே நெடுஞ்சாலை இதுவாகும். மேலும், ராம்பான் மாவட்டத்தில் நான்கு இடங்களில் கற்கள், நிலச்சரிவுகளால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

Advertisement

Advertisement

கற்கள் உருண்டு விழுந்துள்ளதன் காரணமாக புதன்கிழமை இரவு முதல் மூர் ராம்பானில் நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது.

காஷ்மீர் செல்லும் அமர்நாத் பயணிகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் கான்வாய் மற்றும் சித்ரகூட் மற்றும் நஷ்ரியில் நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். சாலையைச் சீரமைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

முன்னதாக நேற்று ஒருசில இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக தேசிய நெடுஞ்சாலை சில மணி நேரம் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments