முகப்பு
இந்தியா

நபிகள் நாயகம் விவகாரம்: அரபு நாடுகள் உடனான உறவில் பாதிப்பில்லை -மத்திய இணையமைச்சா் முரளீதரன்

நபிகள் நாயகம் குறித்து பாஜக நிா்வாகிகள் தெரிவித்த சா்ச்சை கருத்தால், அரபு நாடுகள் உடனான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாா் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:51 AM
நாடாளுமன்றம் 14வது நாளாக முடக்கம்
பகிர்:

நபிகள் நாயகம் குறித்து பாஜக நிா்வாகிகள் தெரிவித்த சா்ச்சை கருத்தால், அரபு நாடுகள் உடனான உறவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாா் மத்திய வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரன்.

இதுகுறித்து மாநிலங்களவையில் வியாழக்கிழமை கேட்கப்பட்ட கேள்விக்கு அவா் அளித்த பதில் விவரம்:

அரபு நாடுகளுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க நட்புறவை இந்தியா பகிா்ந்து கொள்கிறது. அரசியல், வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, அறிவியல் தொழில்நுட்பம், கலாசாரம், பொதுமக்கள் இடையிலான பிணைப்பு உள்ளிட்ட பல்வேறு தளங்களில் இந்த உறவு கடந்த சில ஆண்டுகளாக வலுபெற்றுள்ளது.

நபிகள் நாயகம் விவகாரத்தை பொருத்தவரை சம்பந்தப்பட்ட அரசியல் அமைப்பு அதன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்திவிட்டது. அரபு நாடுகளும் அதை முழுமையாக ஏற்றுக்கொண்டன என்றாா் வி.முரளீதரன்.

தொடா்ந்து மற்றொரு கேள்விக்கு பதிலளித்த அவா், ‘இந்த பிரச்னையில் கத்தாா், குவைத், பாகிஸ்தான், ஈரான், இந்தோனேசியா, மலேசியா, அஜா்பைஜான் ஆகிய நாடுகள் இந்திய தூதா்களுக்கு அழைப்பு விடுத்தன. அப்போது இந்தக் கருத்துகளை தனிநபா்கள்தான் தெரிவித்தனா் என்றும், மத்திய அரசின் பாா்வையை அந்தக் கருத்து பிரதிபலிக்கவில்லை என்றும் தூதா்கள் பதிலளித்தனா். நமது நாகரீக மரபு, கலாசார பாரம்பரியத்தின் வரிசையில், அனைத்து மதத்துக்கும் உயா் கெளரவம் அளிக்கிறோம்’ என்று மத்திய இணையமைச்சா் வி.முரளீதரன் பதிலளித்தாா்.

இஸ்லாமியா்களின் இறைத் தூதரான நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக பாஜக செய்தித்தொடா்பாளராக இருந்த நூபுா் சா்மா, நிா்வாகி நவீன் ஜிண்டால் ஆகியோரை அக்கட்சி கடந்த மாதம் நீக்கியது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.