இந்தியா

கரோனா நெறிமுறைகளைப் பின்பற்றுவதில் எந்தத் தொய்வும் இல்லை: சுகாதார அமைச்சர் 

கேரள மாநிலத்தில் கரோனா நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வருவதாக மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் திங்கள்கிழமை தெரிவித்தார். 

DIN

கேரள மாநிலத்தில் கரோனா நெறிமுறைகளை தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும், குரங்கு காய்ச்சல் பாதிப்பினால், தொற்று நோய்க்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகளில் எந்தத் தொய்வும் ஏற்படவில்லை என்று மாநில சுகாதார அமைச்சர் வீனா ஜார்ஜ் திங்கள்கிழமை தெரிவித்தார். 

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜார்ஜ், 

முகக்கவசம் அணிதல், கைசுத்த திரவம் பயன்படுத்துதல், சோப்பினால் கைகளைக் கழுவுதல் மற்றும் சமூக இடைவெளி கடைப்பிடித்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகள் கரோனா மற்றும் குரங்கு காய்ச்சலுக்கு ஒரே மாதிரியானவை. அதில் எந்தத் தளர்வும் இல்லை. 

குரங்கு காய்ச்சலால் காரணமாக கரோனா நெறிமுறைகளை மாநிலம் கடைப்பிடிக்கவில்லை என்று மத்திய அரசு கூறுவது உண்மைக்கு மாறானது, அரசியல் தன்மை கொண்டது. 

கரோனா நெறிமுறைகள் மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை அரசு கட்டாயம் பின்பற்றி வருகின்றது என்று அவர் வலியுறுத்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேஷம் - மீனம்: தினப்பலன்கள்!

மத்திய நிதிநிலை அறிக்கை ஏமாற்றம் அளிக்கிறது: அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

ஆதிச்சநல்லூா் மேம்பாடு முதல் பொதிகை மலை வரை.. மத்திய பட்ஜெட்டில் கவனம் பெற்ற தமிழக பகுதிகள்!

2.2.1976: த.நா. முழுதும் கூட்டங்களுக்கு தடை

பட்ஜெட்டில் சொல்லிக் கொள்ளுப்படியாக ஒன்றுமில்லை: திருச்சி சிவா

SCROLL FOR NEXT