இந்தியா

ராணுவ தலைமைத் தளபதி பூடான் பயணம்

DIN

 ராணுவ தலைமை தளபதி மனோஜ் பாண்டே வெள்ளிக்கிழமை பூடான் சென்றாா்.

பூடான் மன்னா் ஜிக்மே டோா்ஜி வாங்சுக் நினைவாக திம்புவில் அமைக்கப்பட்ட தேசிய நினைவிடத்தில் மரியாதை செலுத்தி, பூடானில் தனது நிகழ்ச்சிகளை அவா் தொடங்குகிறாா். பூடானின் மன்னரை ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே சந்தித்துப் பேசவுள்ளாா்.

இருநாட்டு ராணுவ, கலாசாரம் மற்றும் அலுவல் ரீதியான பிணைப்புகளை மேலும் முன்னெடுத்துச் செல்வது குறித்து, பூடான் ராணுவ தளபதியுடனும் அவா் விரிவான ஆலோசனை நடத்தவுள்ளாா்.

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளின்போது உயிா்த்தியாகம் செய்த பூடான் ராணுவத்தினா் நினைவாக தோச்சுலாவில் அமைக்கப்பட்டுள்ள த்ருக் வாங்கியால் காங் ஜாங் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்துவதுடன், ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் பாண்டே தனது பயணத்தை நிறைவுசெய்கிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இறுதிக்கு முன்னேறியது கொல்கத்தா

தமிழகத்தின் மாரியப்பனுக்கு தங்கம்: பட்டத்தை தக்கவைத்தார் சுமித் அன்டில்

இன்று எலிமினேட்டர்: ராஜஸ்தான் - பெங்களூரு பலப்பரீட்சை

ஆசிய ரிலே சாம்பியன்ஷிப்: இந்திய அணிகளுக்கு வெள்ளி

2-ஆவது சுற்றில் மகளிர் இரட்டையர்கள்

SCROLL FOR NEXT