இந்தியா

புகையிலை பொருள்களை வாங்குவோருக்கு காத்திருக்கிறது அதிர்ச்சி

PTI


புது தில்லி: புகையிலை பொருள்கள் மீதான எச்சரிக்கை புகைப்படம் மற்றும் வாசகங்களை மாற்றியமைக்க மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் வரும் டிசம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு உற்பத்தி செய்யப்படும், இறக்குமதி அல்லது பொட்டலமிடப்படும் புகையிலைப் பொருள்கள் மீதான எச்சரிக்கை புகைப்படங்கள் மற்றும் புகையிலைப் பொருள்களால் வலிமிகுந்த மரணத்தைத் தழுவ நேரிடும் என்பது போன்ற வாசகங்களை மாற்றியமைக்க மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

டிசம்பர் 1ஆம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வரும் இந்த புதிய புகைப்படம் ஓராண்டு காலத்துக்கு நடைமுறையில் இருக்கும்.

2023ஆம் ஆண்டு டிசம்பர் 1ஆம் தேதிக்குப் பிறகு உற்பத்தி அல்லது இறக்குமதி அல்லது பொட்டலமிடப்படும் புகையிலைப் பொருள்கள் மீது புதிய புகைப்படம் மற்றும் புகையிலையைப் பயன்படுத்துபவர்கள் இளமையிலேயே மரணத்தைத்தழுவுகிறார்கள் என்ற வாசகத்தையும் இடம்பெறச் செய்ய வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 தொடரை வெல்லப்போவது யார்?

தூத்துக்குடி மாவட்டத்துக்கு மே 22-ல் உள்ளூர் விடுமுறை!

இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாகிஸ்தானுடன் இணையும் கேரி கிறிஸ்டன்!

பேருந்து, ரயில், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்: வெளியான அறிவிப்பு!

‘ஏஐ படங்களில் வருவதுபோல..’ புதிய சாட்ஜிபிடி அறிமுகத்தில் சாம் ஆல்ட்மேன்!

SCROLL FOR NEXT