கோப்புப் படம் 
இந்தியா

உ.பி.: தோழியின் வீட்டு முன் துப்பாக்கியால் சுட்டு இளைஞர் தற்கொலை

உ.பி.யில் தோழியின் வீட்டு முன் இளைஞர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

DIN

உ.பி.யில் தோழியின் வீட்டு முன் இளைஞர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேசம் மாநிலம், பாபத்மவு கிராமத்தைச் சேர்ந்தவர் இளைஞர் தீபக்(21). இவர், கந்தேரியா கிராமத்தில் உள்ள தனது தோழியின் வீட்டிற்கு சென்றிருக்கிறார். பின்னர் அங்கு வெளியே போடப்பட்டிருந்த கட்டிலில் அமர்ந்தார். ஆனால் இவரது வருகைக்கு தோழியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது தனக்கு தாகமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். உடனே ஒரு குழந்தை அவருக்கு தண்ணீர் கொண்டு வந்திருக்கிறது, ஆனால் அவர் அதை குடிக்கவில்லை. மாறாக, அருகில் இருந்த குழாய்க்கு சென்று தீபக் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். 

தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த காவல்துறையினர் இளைஞரின் சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவில் ஓபிஎஸ்! இன்று இணைகிறார்?

ஆடம்பரத்தைத் தவிர்த்திடுவீர்! பிறந்த நாளையொட்டி கட்சியினருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிவுரை!

பழைய ஒப்பந்ததாரா்களுக்கு கடைகள் ஒதுக்கீடு: ஆற்காடு நகா்மன்றத் தலைவா்

பொதுத்தோ்வில் மாணவா்கள் தோ்ச்சி பெற பாலா பீடத்தில் சிறப்பு வழிபாடு

அரக்கோணம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.90 கோடியில் புதிய கட்டடம் திறப்பு

SCROLL FOR NEXT