இந்தியா

ஹைதராபாத் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: 4 பேர் கைது 

DIN

ஹைதராபாத்தில் 17 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

ஹைதராபாத்தின் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் 17 வயது சிறுமி ஒருவர் தோழியுடன் மதுபான விடுதிக்குச் சென்றிருக்கிறார். அவரது தோழி விரைவாகச் சென்றுவிட, சிறுமி அங்கிருந்த சிறுவர்களுடன் பேசியுள்ளார். அவர்கள் சிறுமியை காரில் வீட்டில் விட்டுவிடுவதாகக் கூறி அழைத்துச் சென்றனர். அப்போது காரிலேயே அந்த சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். 

இரு தினங்களுக்குப் பிறகு சிறுமி இதுகுறித்து தன் தந்தையிடம் கூறவே, சிறுமியின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது. 

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய காவல்துறையினர், நேற்று சாதுதீன் மாலிக் என்ற மாணவரை கைது செய்தனர்.  இதையடுத்து ஒமர் கான் மற்றும் இன்னொருவர் மாணவரைக் கைது செய்தனர்.

இந்நிலையில், இன்று இந்த வழக்கில் தொடர்புடைய நான்காவது குற்றவாளியை கைது செய்ததாக காவல்துறையினர் அறிவித்துள்ளனர். 

ஓடும் காரில் சிறுமி ஒருவரை 5 பள்ளி மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மகாராஷ்டிரத்தில் விரைவில் வாக்குப்பதிவு: வெங்காய ஏற்றுமதி தடை நீக்கம்

ஆந்திரத்தில் 227 மண்டலங்களில் வெப்ப அலை வீசும்!

ஆம் ஆத்மி பிரசாரப் பாடலுக்கு தேர்தல் ஆணையம் அங்கீகாரம்

கிரிக்கெட்டே வாழ்கை, வாழ்க்கையே கிரிக்கெட்!

ஏற்காட்டில் பேருந்து விபத்தில் காயமடைந்தவர்களிடம் இபிஎஸ் நலம் விசாரிப்பு

SCROLL FOR NEXT