இந்தியா

ஒடிஸாவில் 21 அமைச்சர்கள் பதவியேற்பு!

DIN


ஒடிசாவில் 5 பெண்கள் உள்பட மொத்தம் 21 பேர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

2024-இல் வரவுள்ள சட்டப்பேரவை மற்றும் மக்களவைத் தேர்தலுக்காகக் கட்சியைப் பலப்படுத்த முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையிலான அமைச்சரவை சனிக்கிழமை ராஜிநாமா செய்தது. இதைத் தொடர்ந்து, இன்று புதிய அமைச்சரவை பதவியேற்றுக் கொண்டது. புதிய முகங்களுக்கு வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இதன்மூலம், அமைச்சரவையில் அனுபவம் வாய்ந்தவர்கள் மற்றும் இளைஞர்கள் என இரண்டும் கலந்து உள்ளன.

புவனேஸ்வரில் பதவியேற்பு விழா நடைபெற்றது. மொத்தம் பதவியேற்றுக்கொண்ட 21 அமைச்சர்களில் 13 பேர் கேபினட் அந்தஸ்தைப் பெற்றுள்ளனர். 5 பெண்கள் அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டதில், 3 பேர் கேபினட் அமைச்சர்கள். கடந்த முறை கேபினட் அந்தஸ்தில் 2 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுக்கப்பட்டது.

நவீன் பட்நாயக் தலைமையிலான ஆட்சி கடந்த மே 29-ம் தேதியுடன், 3 ஆண்டுகால ஆட்சியைக் கடந்து 4-ம் ஆண்டு ஆட்சியில் அடியெடுத்து வைத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நான்குனேரியில் 2 போ் குண்டா் தடுப்பு சட்டத்தில் கைது

பொத்தகாலன்விளை விலக்கில் வழிகாட்டிப் பலகை அமைக்க கோரிக்கை

வஉசி பூங்கா அருகே ஓடையில் கான்கிரீட் மூடி அமைக்க கோரிக்கை

மாட்டு வண்டி பந்தயத்துக்கு அனுமதி கோரி ஆட்சியா் அலுவலகத்தில் மனு

ராஜவல்லிபுரம் இளைஞா் குண்டா் சட்டத்தில் கைது

SCROLL FOR NEXT