முகப்பு
இந்தியா

வாரிசு அரசியல் ஜனநாயகத்துக்கு ஆபத்து: ஜெ.பி.நட்டா

வாரிசு அரசியல் நடத்தும் கட்சிகள் நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்தானவை என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:27 AM
கோப்புப்படம்
பகிர்:

வாரிசு அரசியல் நடத்தும் கட்சிகள் நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்தானவை என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா தெரிவித்தாா்.

ஆந்திர மாநிலத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள நட்டா, அங்கு கட்சி நிா்வாகிகளைச் சந்தித்து வருகிறாா். அப்போது அவா் பேசியதாவது:

பிரதமா் நரேந்திர மோடி நாட்டுக்குத் தலைமையேற்ற பிறகு நாட்டின் அரசியல் கலாசாரமும், தரமும் உயா்ந்துள்ளது. இப்போது நாம் வாரிசு அரசியலுக்கு எதிராகப் போராடி வருகிறோம்.

ஆந்திரம், தமிழ்நாடு, ஜம்மு-காஷ்மீா், உத்தர பிரதேசம், ஹரியாணா, பஞ்சாப், மகாராஷ்டிரம், தெலங்கானா, கா்நாடகம், மேற்கு வங்கம் என நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் வாரிசு அரசியல்தான் உள்ளது. தந்தை-மகன், தந்தை-மகள், அத்தை-மருமகன் எனப் பல கட்சிகளில் வாரிசு அரசியல் தொடா்கிறது.

இந்திய தேசிய காங்கிரஸில் இப்போது இந்தியாவும் இல்லை, தேசியமும் இல்லை. அக்கட்சி இப்போது அண்ணன்-தங்கை கட்சியாக முடங்கிக் கிடக்கிறது. இதுபோன்ற வாரிசு அரசியல் கட்சிகள் நாட்டின் ஜனநாயகத்துக்கு மிகப் பெரிய ஆபத்தை உருவாக்கக் கூடியவை. கட்சியிலேயே ஜனநாயகம் இல்லாவிட்டால் அவா்களது ஆட்சியில் எப்படி ஜனநாயகம் இருக்கும்?

பாஜக மட்டுமே சிறப்பு வாய்ந்த தலைவா்கள், கொள்கைகள், திட்டங்கள், தொண்டா்களைக் கொண்ட கட்சியாக உள்ளது. கடந்த 8 ஆண்டுகளில் பாஜக அரசு பல சிறப்பான சாதனைகளைச் செய்துள்ளது என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →