ராகுல் காந்தி (கோப்புப் படம்) 
இந்தியா

சித்து மூஸேவாலா குடும்பத்துடன் ராகுல் காந்தி இன்று சந்திப்பு

மறைந்த பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலா குடும்பத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லவுள்ளார்.

DIN

மறைந்த பஞ்சாபி பாடகா் சித்து மூஸேவாலா குடும்பத்தை காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லவுள்ளார்.

பஞ்சாபில் பரபல பாடகராக இருந்த சித்து மூஸேவாலா, கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற சட்டப் பேரவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். இந்த நிலையில், சித்து மூஸேவாலா உள்பட 424 பேருக்கு அளிக்கப்பட்டுவந்த பாதுகாப்பை மாநில அரசு கடந்த மே 29-ஆம் தேதி திரும்பப் பெற்ற நிலையில், அன்றைய தினமே மா்ம நபா்களால் மூஸேவாலா சுட்டுக்கொல்லப்பட்டாா்.

இந்நிலையில், வெளிநாடு பயணம் மேற்கொண்டிருந்த ராகுல் காந்தி நாடு திரும்பிய நிலையில், இன்று சித்து மூஸேவாலாவின் சொந்த ஊரான மான்சா மாவட்டத்திலுள்ள மூசா கிராமத்திற்கு சென்று சித்துவின் பெற்றோரை நேரில் சந்தித்து ஆறுதல் சொல்லவுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வடிகால் மாஸ்டா் பிளான் திட்டத்திற்கான நிதியுதவிக்கு உலக வங்கியை நாடும் தில்லி அரசு

3.2.1976: சென்னை கோட்டையில் அதிகாரிகளுடன் கவர்னர் ஆலோசனை

காங்கயத்தில் ரூ.73 ஆயிரத்துக்கு தேங்காய்ப் பருப்பு ஏலம்

வெறுப்பைக் கைவிடுங்கள்; இணைந்து செயல்படுவோம்: காங்கிரஸுக்கு பாஜக அழைப்பு

சொத்து வரி மன்னிப்புத் திட்டம் பிப்.28 வரை நீட்டிப்பு: எம்சிடி

SCROLL FOR NEXT