இந்தியா

காஷ்மீரில் லேசான நிலநடுக்கம்

DIN

காஷ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. 

இதுகுறித்து பேரிடர் மேலாண்மை ஆணைய அதிகாரிகள் கூறுகையில், 

இந்த நிலநடுக்கமானது நள்ளிரவு 12.37 மணியளவில் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 3.7 ஆகப் பதிவாகியது. 

நிலநடுக்கத்தின் வடக்கு அட்சரேகை 33.48 டிகிரியாகவும், கிழக்கு தீர்க்கரேகை 75.59 ஆகவும், பஹல்காம் பகுதியில் 5 கி.மீ ஆழத்திலும் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் இதுவரை பொருட்சேதமோ, உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. 

கடந்த அக்டோபர் 8, 2005 அன்று, ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

கோடை வெயிலுக்கு இடையே கனமழை: அடுத்த 2 நாள்களுக்கு!

SCROLL FOR NEXT