இந்தியா

கோயிலில் முதல் மரியாதை கடவுளுக்கு மட்டுமே: நீதிமன்றம்

DIN


மதுரை: கோயிலில் முதல் மரியாதை கடவுளுக்கு மட்டுமே,  மனிதனுக்கு அல்ல என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புனரி அடுத்த வடவன்பட்டியில் அமைந்துள்ள சண்டிவீரன் கோயிலில், சாதி அடிப்படையில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிக்கப்படுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உயர் நீதிமன்ற கிளை நீதிபதி நிர்மல்குமார் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

வடவன்பட்டி சண்டிவீரன் கோயிலில் யாருக்கும் முதல் மரியாதை வழங்கக் கூடாது என்று சேதுபதி என்பவர் தொடர்ந்த வழக்கில், சாதி அடிப்படையில் தனிப்பட்ட நபருக்கு முதல் மரியாதை அளிப்பது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கோயிலில் முதல் மரியாதை கடவுளுக்கு மட்டுமே; மனிதனுக்கு அல்ல என்றும், கோயில்களில் யாருக்கும் முதல் மரியாதை அளிக்கப்படவில்லை என்பதை தமிழக அரசு உறுதி செய்யவும் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரட்டை வேடங்களில் சோனாக்‌ஷி சின்ஹா!

அதானி பெயரை ராகுல் 103 முறை உச்சரித்திருக்கிறார்: மோடிக்கு ஜெய்ராம் ரமேஷ் பதில்

பாகுபலி அனிமேஷனில் தோனியின் முகம்: ராஜமௌலி கூறியது என்ன?

வாக்குச்சாவடியை சூறையாடிய பாஜக எம்.பியின் மகன்: குஜராத்தில் அதிர்ச்சி!

மெட் காலாவில் கவனத்தை ஈர்த்த மோனா பட்டேல்.. யார் இவர்?

SCROLL FOR NEXT