முகப்பு
கோப்புப்படம்
இந்தியா

திரிபுராவில் வெள்ளம்: 2 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்தன

மேற்கு திரிபுரா மாவட்டத்தின் சதர் உட்பிரிவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். 

இந்தியா

திரிபுராவில் வெள்ளம்: 2 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்தன

மேற்கு திரிபுரா மாவட்டத்தின் சதர் உட்பிரிவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
கோப்புப்படம்
பகிர்:

 
மேற்கு திரிபுரா மாவட்டத்தின் சதர் உட்பிரிவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்துள்ளதாக அதிகாரிகள் சனிக்கிழமை தெரிவித்தனர். 

மேற்கு திரிபுரா மாவட்டத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 155 மி.மீ மழை பெய்துள்ளது. இதனால் ஹவுரா ஆற்றங்கரையில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஹவுரா ஆற்றின் நீர்மட்டம் அபாய அளவை விட அதிகமாகப் பாய்கிறது. எனவே இது அகர்தலாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள பல தாழ்வான பகுதிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது. 

மழை மேலும் பெய்தால் நிலைமை மோசமடையக்கூடும் என்று சதர் துணைப்பிரிவு நீதிபதி அஷிம் சாஹா கூறினார். 

பாதிக்கப்பட்ட பகுதிகளில் காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் நிர்வாகம் இணைந்து நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.

அம்மாநில முதல்வர் மாணிக் சாஹா வெள்ளிக்கிழமை இரவு கட்டுப்பாட்டு மையத்திற்குச் சென்று நிலைமையை ஆய்வு செய்தார்.

நிலைமையைக் கையாளவும், வெள்ளத்தால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடவும் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அதிகாரிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

நிலைமையைக் கருத்தில் கொண்டு, சனிக்கிழமை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்று மாநில அரசு ஏற்கனவே அறிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →