முகப்பு
இந்தியா

தாய் பிறந்தநாள்: நேரில் ஆசி பெற்றார் பிரதமர் மோடி (விடியோ)

தாய் ஹீராபென் மோடி இன்று (சனிக்கிழமை) 100-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:33 AM
பகிர்:


தாய் ஹீராபென் மோடி இன்று (சனிக்கிழமை) 100-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைப்பதை முன்னிட்டு, பிரதமர் நரேந்திர மோடி அவரை நேரில் சந்தித்து ஆசி பெற்றார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் மோடி குஜராத் மாநிலம் காந்திநகரில் வசிக்கிறார். அவர் இன்று தனது 100-வது பிறந்தநாளில் அடியெடுத்து வைக்கிறார். இதை முன்னிட்டு காந்தி நகரிலுள்ள ஒரு சாலைக்கு அவரது பெயர் சூட்டப்படுவதாக காந்திநகர் மேயர் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி தனது தாயைச் சந்திக்க காந்தி நகர் வீட்டிற்குச் சென்றார். தாயிடம் ஆசி பெற்ற பிரதமர், வீட்டில் விளக்கேற்றி, தாய்-க்கு பாத பூஜை செய்தார்.

தொடர்ந்து, அவருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு, இருவரும் ஒருவருக்கொருவர் இனிப்புகளைப் பறிமாறிக்கொண்டனர்.

தாயுடன் சிறிது நேரம் செலவழித்த பிரதமர் மோடி, பின்னர் அங்கிருந்து புறப்பட்டார்.

இதன் புகைப்படங்கள் மற்றும் விடியோக்கள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகின்றன.

முழு கட்டுரையைப் படிக்க →