இந்தியா

அந்தரத்தில் நின்ற ரோப் கார்: மீட்புப் பணிகள் தீவிரம்(விடியோ)

ஹிமாச்சல் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற ரோப்கார் தொழில்நுட்பக் காரணத்தால் அந்தரத்தில் நின்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

DIN

ஹிமாச்சல் பிரதேசத்தில் சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற ரோப் கார் தொழில்நுட்பக் காரணத்தால் அந்தரத்தில் நின்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

பர்வானு அருகே இன்று பிற்பகலில் 4 பெண்கள், 2 முதியோர்கள் உள்பட 11 சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற ரோப்கார் தொழில்நுட்பக் காரணத்தால் நடுவானில் நின்றது. மேலும், கீழ் மலைப் பகுதியில் 5 பயணிகளுடன் சென்ற ரோப் காரும் நின்றது.

இந்நிலையில், சுமார் 2 மணிநேரமாக அந்தரத்தில் தொங்கியபடி இருக்கும் ரோப்காரில் இருந்து இதுவரை 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மேலும், மற்ற சுற்றுலாப் பயணிகளை மீட்கும் பணி நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து, மீட்புப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர். விமானப் படையும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் நடந்த இடத்திற்கு மீட்புப் பணிகளை பார்வையிட ஹிமாச்சல் முதல்வர் ஜெய்ராம் தாகூர் சென்றுள்ளார்.

கடந்த ஏப்ரல் மாதம் ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டு ரோப் கார்கள் மோதி விபத்துக்குள்ளான நிலையில், அடுத்த சம்பவம் நடந்திருப்பது சுற்றுலாப் பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திருவள்ளூா் மாவட்டத்தில் 13 பேருக்கு நல்லாசிரியா் விருது

பள்ளிப்பட்டு ஊராட்சியில் வளா்ச்சிப் பணிகள்: திருவள்ளூா் ஆட்சியா் ஆய்வு

ஆசிரியா் தின விழா: ஓய்வுபெற்ற ஆசிரியா்களுக்கு பாராட்டு

ஸ்ரீபுரம் தங்கக்கோயில் நாளை இரவு 7 மணிக்கு அடைப்பு

போ்ணாம்பட்டில் பேருந்து நிலையத்துக்கு இடம் தோ்வு

SCROLL FOR NEXT