இந்தியா

அக்னிபத் திட்டம்: ஜூன் 27-ல் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

DIN

அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜூன் 27ஆம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

மத்திய அரசு அண்மையில் அறிவித்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிர்ப்பு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

தில்லியில் காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் விஜய் சவுக்கிலிருந்து பேரணியாக சென்ற காங்கிரஸ் எம்.பி.க்கள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை நேரில் சந்தித்து மனு அளித்தனர்.

இந்நிலையில், வரும் 27ஆம் தேதி நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, தில்லி இன்று மாலை அனைத்து மாநிலங்களின் காங்கிரஸ் தலைவர்கள், மாநில பொறுப்பாளர்கள் மற்றும் தொண்டர்களை ராகுல் காந்தி சந்தித்து பேசவுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

கருப்பு வெள்ளைப் பூ.. ரவீனா தாஹா!

'தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கும் பெறாதவர்களுக்கும்..’ : கமல்ஹாசனின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT