முகப்பு
இந்தியா

அமித் ஷா, வெங்கைய நாயுடுவுடன் திரெளபதி முர்மு சந்திப்பு

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சந்தித்தார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:36 AM
பகிர்:

தில்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவை தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு இன்று சந்தித்தார்.

அடுத்த மாதம் நடைபெறவுள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக ஜார்கண்ட் முன்னாள் ஆளுநர் திரெளதி முர்மு அறிவிக்கப்பட்டுள்ளார்.

நாளை காலை வேட்புமனுத் தாக்கல் செய்வதற்காக இன்று சொந்த ஊரிலிருந்து தில்லி வந்தடைந்த திரெளபதி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். தொடர்ந்து, துணை குடியரசுத் தலைவர் வெங்கைய நாயுடுவை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →