பிரதமர் மோடி நாளை(ஜூன்-25) ஜெர்மனி பயணம்
ஜி7 மாநாட்டில் பங்கேற்க நாளை (ஜூன்-25) பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி செல்ல உள்ளார்.
ஜி7 மாநாட்டில் பங்கேற்க நாளை (ஜூன்-25) பிரதமர் நரேந்திர மோடி ஜெர்மனி செல்ல உள்ளார்.
ஜெர்மனி அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸின் அழைப்பின் பேரில் ஜி7 மாநாட்டில் கலந்துகொள்ள பிரதமர் மோடி நாளை ஜெர்மனி செல்ல உள்ளதாக இந்திய வெளியுறவு செயலர் வினய் க்வாட்ரா தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: 'உத்தவ் தாக்கரேவும் ஹோட்டலுக்கு வரலாம்' - அசாம் முதல்வர் கிண்டல் பேச்சு!
Advertisement
Advertisement
அங்கு ஜூன் 26, 27 தேதிகளில் நடக்கும் மாநாட்டில் சுற்றுச்சூழல், பருவநிலை, எரிசக்தி, உணவுப் பாதுகாப்பு, பாலின சமத்துவம், குடியரசு மற்றும் சர்வதேச உறவு ஆகியவை குறித்து விவாதிக்கப்படும் என இந்திய வெளியுறவுத் துறை அறிவித்துள்ளது.
இம்மாநாட்டில் பங்கேற்க அர்ஜெண்டினா, இந்தோனேசியா, செனகல் மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், பயணத்தை முடித்தபின் ஜூன் 28 ஆம் தேதி பிரதமர் மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்ல உள்ளார். அங்கு மறைந்த அதிபா் ஷேக் காலிஃபா பின் சயீது அல் நயான் மறைவுக்கு தனிப்பட்ட முறையில் துக்கம் அனுசரிப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.