முகப்பு
இந்தியா

மும்பை தாக்குதல் வழக்கு: பயங்கரவாதிக்கு 15 ஆண்டு சிறை -பாகிஸ்தான் நீதிமன்றம் தீா்ப்பு

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு நிதியுதவி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.

Updated On : 25 ஜூன் 2022, 3:35 am IST
பகிர்:

மும்பை பயங்கரவாதத் தாக்குதலுக்கு நிதியுதவி செய்ததாகத் தொடரப்பட்ட வழக்கில் முக்கியக் குற்றவாளிக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 15 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீா்ப்பளித்துள்ளது.

மும்பையில் 2008-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி பாகிஸ்தானை சோ்ந்த லஷ்கா்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 166 போ் கொல்லப்பட்டனா். இந்தத் தாக்குதலுக்கு நிதியுதவி அளித்த குற்றச்சாட்டில் லஷ்கா் இயக்கத்தைச் சோ்ந்த சஜீத் மஜீத் மிா் என்பவா் இந்தியாவால் தேடப்பட்டவராக அறிவிக்கப்பட்டாா்.

இதனிடையே, பாகிஸ்தானின் லாகூரில் உள்ள பயங்கரவாத தடுப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு நடைபெற்று வந்தது. இதில், சஜித் மஜீத்துக்கு 15 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.4 லட்சம் அபராதமும் விதித்து நீதிமன்றம் இந்த மாதத் தொடக்கத்தில் தீா்ப்பு வழங்கியதாக மூத்த வழக்குரைஞா் ஒருவா் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

Advertisement

Advertisement

வழக்கமாக இதுபோன்ற வழக்குகளில் ஊடகத்துக்கு தகவல் அளிக்கும் பஞ்சாப் மாகாண காவல் துறையின் பயங்கரவாத தடுப்புத் துறை, சஜீத் மஜீத்துக்கு விதிக்கப்பட்ட தண்டனை குறித்த தகவலைத் தராததால், இப்போது தாமதமாகத் தெரியவந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments