இந்தியா

உத்தவ் தாக்கரே ராஜிநாமா

DIN


மகாராஷ்டிர மாநில முதல்வர் பதவியை ராஜிநாமா செய்வதாக உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். 

நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தத் தடையில்லை என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து தாக்கரே இந்த முடிவை எடுத்துள்ளார். மேலும், 
சட்டப்பேரவை மேலவை உறுப்பினர் பதவியையும் ராஜிநாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

சமூகவலைதளம் மூலம் தொண்டர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, உடன் நின்ற தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவாருக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்திக்கும் நன்றி தெரிவித்தார். கடினமான சூழலில் காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் தொண்டர்களும் உடன் நின்றதைக் குறிப்பிட்டார்.

விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், அடுத்து அமையவுள்ள அரசுக்கு முழு ஒத்துழைப்பு தரத் தயாராகவுள்ளதாகவும் குறிப்பிட்டார்.   

அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் சூரத் செல்வதைத் தவிர்த்து என்னுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கலாம் என்றும், நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிப்பதாகவும் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உலக கராத்தே போட்டி: விழுப்புரத்திலிருந்து மூவா் பங்கேற்பு

தஞ்சை அருகே சோழர் கால நந்தி, விஷ்ணு சிற்பங்கள் கண்டெடுப்பு

தி‌ல்லி கலா‌ல் ஊழ‌ல் வழ‌க்கு: அர​வி‌ந்‌த் கேஜ‌​ரி​வா​லுக்கு நீதிமன்றக் காவ‌ல் நீ‌ட்டி‌ப்பு

ம‌க்​க​ளவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்​த‌ல்: 93 தொகு​தி​க​ளி‌ல் 64% வா‌க்​கு‌ப்​ப​திவு

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

SCROLL FOR NEXT