ஆபரேஷன் கங்கா: பாகிஸ்தான் வான்வழியை தவிர்க்கும் இந்திய விமானப்படை 
இந்தியா

ஆபரேஷன் கங்கா: பாகிஸ்தான் வான்வழியை தவிர்க்கும் இந்திய விமானப்படை

ஆபரேஷன் கங்கா திட்டத்தில், இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து வருகிறது.

IANS


புது தில்லி: ரஷியா போர் தொடுத்திருக்கும் உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்து வர மத்திய அரசு நடத்தி வரும் ஆபரேஷன் கங்கா திட்டத்தில், இந்திய விமானப் படை விமானங்கள் பாகிஸ்தான் வான்வழியை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்த்து வருகிறது.

உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்புத் தொடங்கி 8வது நாளை அடைந்திருக்கும் நிலையில், இந்தியர்களை மீட்கும் பணியில் தற்போது இந்திய விமானப் படை விமானங்கள் ஈடுபட்டு வருகின்றன. 

இந்திய விமானப் படைக்குச் சொந்தமான சி-17 ரக போக்குவரத்து விமானம் ஹங்கேரி, போலந்து, ருமேனியா ஆகிய உக்ரைனின் அண்டை நாடுகளிலிருந்து இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருகிறது.

இந்த நிலையில், உக்ரைனிலிருந்து இந்தியர்களை மீட்கும் பணிக்கு, பாகிஸ்தான் வான்வழியை இந்திய விமானப் படை தவிர்த்துவிடுவது என்றும், எந்த வகையிலும் இஸ்லாமாபாத்திடமிருந்து இந்திய ராணுவம் உதவியைக் கோரக் கூடாது என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

ஒரு நாட்டின் பாதுகாப்புப் படை விமானங்கள், வேறு எந்தவொரு நாட்டின் வான்வழியைப் பயன்படுத்துவதாக இருந்தாலும், அந்த நாட்டிடமிருந்து பல்வேறு முன்அனுமதிகளைப் பெற வேண்டியது அவசியம். எனவே, தான் பாகிஸ்தானிடம் அதுபோன்ற எந்த ஒரு உதவியையும் கோர வேண்டாம் என்று வான்வழியே தவிர்த்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம், கூடுதலாக 30 நிமிடங்கள் பயண நேரம் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Vijay full speech | வேலூரில் பேசும்போது கண்கலங்கிய விஜய்! | TVK | Vellore

'என் பின்னால் வராதீங்க' - கெஞ்சிக் கேட்ட விஜய்!

மெக்சிகோவில் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்கவுன்டர்! ஆதரவாளர்கள் வன்முறை!

தேர்தலுக்குப் பின்பே ஜன நாயகன்?

பொன்னமராவதி அருகே ஜல்லிக்கட்டுப் போட்டி

SCROLL FOR NEXT