தில்லியில் நாளை பிரதமர் மோடியை சந்திக்கிறார் யோகி ஆதித்யநாத்!
உத்தரப் பிரதேச முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத் நாளை தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.
உத்தரப் பிரதேச முதல்வர் வேட்பாளர் யோகி ஆதித்யநாத் நாளை தில்லி சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளார்.
நடத்துமுடிந்த உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தனித்து 255 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கிறது.
முதல்வராக இருந்த யோகி ஆதித்யநாத் நேற்று தனது ராஜிநாமா கடிதத்தை ஆளுநா் ஆனந்திபென் படேலிடம் அளித்தாா். அவரது ராஜிநாமா கடிதத்தை ஏற்றுக் கொண்ட ஆளுநா், புதிய அரசு அமையும் வரை யோகி ஆதித்யநாத்தை காபந்து முதல்வராக செயல்பட வேண்டுகோள் விடுத்தாா்.
Advertisement
Advertisement
அடுத்த முதல்வராக யோகி ஆதித்யநாத் இரண்டாம் முறையாக பதவியேற்பார் என்று தெரிகிறது.
உத்தரப் பிரதேச தேர்தலில் வெற்றியை அடுத்து, யோகி ஆதித்யநாத் நாளை தில்லி செல்ல உள்ளார். பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா, பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்தித்துப் பேசவுள்ளார்.
உ.பி.யில் புதிய அரசு பதவியேற்பு விழாவுக்கு அழைக்கவும் அமைச்சரவை குறித்து விவாதிக்கவும் செல்வதாகக் கூறப்படுகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.