இந்தியா

‘உத்தரகண்ட் தோல்விக்கு நான் பொறுப்பேற்கிறேன்’: ஹரிஷ் ராவத்

DIN

உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் அடைந்த தோல்விக்கு நான் பொறுப்பேற்றுக் கொள்கிறேன் என முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேசம், உத்தரகண்ட், பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்கள் அனைத்திலும் காங்கிரஸ் கட்சி தோல்வியை தழுவியது.

இந்நிலையில், ஹரிஷ் ராவத் இன்று வெளியிட்ட செய்தியில்,

உத்தரகண்டில் வெற்றி பெற்று விடுவோம் என்று அனைவரும் நினைத்தோம். பிரசாரக் குழுத் தலைவர் என்ற முறையில் தோல்விக்கு பொறுப்பேற்றுக் கொள்கிறேன்.

காரியக் கமிட்டி மற்றும் ஒவ்வொரு உறுப்பினரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். இதற்கு முன்னதாக மக்களிடம் மன்னிப்பு கேட்பதாக தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘பார்பி’ ஆண்டிரியா!

தங்கம் விலை அதிரடியாக பவுனுக்கு ரூ.920 குறைவு!

விருதுநகர் அருகே கல்குவாரியில் வெடிவிபத்து: 3 பேர் பலி

அதிக வருவாய் ஈட்டும் முதல் 10 ரயில் நிலையங்களில் தமிழ்நாடு முதலிடம்: தெற்கு ரயில்வே

கொலம்பியா பல்கலை. அரங்கைக் கைப்பற்றிய மாணவர்கள் கைது!

SCROLL FOR NEXT