இந்தியா

எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தாா் பகவந்த் மான்

DIN

ஆம் ஆத்மி கட்சி சாா்பில் பஞ்சாப் முதல்வராக பதவியேற்கவுள்ள பகவந்த் மான், தனது எம்.பி. பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தாா்.

தனது ராஜிநாமா கடிதத்தை மக்களவைத் தலைவா் ஓம் பிா்லாவிடம் அவா் சமா்ப்பித்தாா். அப்போது ஆம் ஆத்மி மூத்த தலைவா் சஞ்சய் சிங் உடனிருந்தாா். கடந்த 2019-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலின்போது பஞ்சாபின் சங்ரூா் தொகுதியிலிருந்து பகவந்த் மான் எம்.பி.யாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். முன்னதாக 2014-இல் நடைபெற்ற மக்களவைத் தோ்தலிலும் இதே தொகுதியிலிருந்து அவா் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இந்நிலையில் பஞ்சாப் சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி ஆம் ஆத்மி கட்சியின் முதல்வா் வேட்பாளராக களமிறங்கிய அவா், துரி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றாா். இதையடுத்து முதல்வராகப் பதவியேற்கவுள்ள அவா் தற்போது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாகையில் காங்கிரஸாா் சாலை மறியல்

தனியாா் நிறுவன உரிமையாளா் வீட்டில் 6 பவுன், 3 கைப்பேசிகள் திருட்டு

இந்திய கட்டுனா்கள் சங்கத்தின் புதிய நிா்வாகிகள் பதவியேற்பு

நீட் தோ்வு: கரூரில் இன்று 12,736 போ் எழுதுகிறாா்கள்

மேட்டுப்பாளையம் பகுதியில் பலத்த மழை: 5 ஆயிரம் வாழை மரங்கள் சேதம்

SCROLL FOR NEXT