லஞ்ச ஒழிப்பு உதவி எண்: பஞ்சாப் முதல்வர் அதிரடி 
இந்தியா

லஞ்ச ஒழிப்பு உதவி எண்: பஞ்சாப் முதல்வர் அதிரடி

பஞ்சாப் மாநிலத்தில் லஞ்ச ஒழிப்பு உதவி எண்கள் வரும் 23ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

ANI


பஞ்சாப் மாநிலத்தில் லஞ்ச ஒழிப்பு உதவி எண்கள் வரும் 23ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

இந்த வசதி மூலம் பஞ்சாப் மாநில மக்கள், வாட்ஸ்-ஆப் மூலமாகவே லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்களை அளிக்கலாம் என்றும் புதிதாக பஞ்சாப் மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள பகவந்த் மான் கூறியுள்ளார்.

மாநிலத்தில் 99 சதவீத மக்கள் நேர்மையுடன்தான் இருக்கிறார்கள். மிச்சம் 1 சதவீத மக்களால்தான், மாநில நிர்வாகமே சிதைந்துவிடுகிறது என்றார்.

பகத்சிங் நினைவு நாளில் லஞ்ச ஒழிப்பு உதவி எண் அறிவிக்கப்படும். அதுதான் எனது தனிப்பட்ட வாட்ஸ்ஆப் எண்ணாக இருக்கும். யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால் அதை விடியோவாகவோ ஆடியோவாகவோ எடுத்து எனக்கு அனுப்புங்கள். ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பஞ்சாபில் இனி ஊழல் அதிக காலம் இருக்காது என்றும் குறிப்பிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

யாருக்கும் SIM CARD வாங்கித்தராதீங்க! புதிய SCAM ALERT! | Cyber Crime | Cyber Shield

ஈழத்தில் தமிழ்க்குரல்... அஞ்சனா!

தம்மம்பட்டி சிவன் கோவிலில் அன்னாபிஷேக விழா! 5 ஆயிரம் பக்தர்கள் பங்கேற்பு

மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் - இஸ்ரேல் அமைச்சர் பதிவு!

பெயரே சொல்லும்; கவிதை தேவையில்லை... சைத்ரா!

SCROLL FOR NEXT