இந்தியா

லஞ்ச ஒழிப்பு உதவி எண்: பஞ்சாப் முதல்வர் அதிரடி

ANI


பஞ்சாப் மாநிலத்தில் லஞ்ச ஒழிப்பு உதவி எண்கள் வரும் 23ஆம் தேதி அறிவிக்கப்படும் என்று மாநில முதல்வர் பகவந்த் மான் தெரிவித்துள்ளார்.

இந்த வசதி மூலம் பஞ்சாப் மாநில மக்கள், வாட்ஸ்-ஆப் மூலமாகவே லஞ்ச ஒழிப்புத் துறைக்கு புகார்களை அளிக்கலாம் என்றும் புதிதாக பஞ்சாப் மாநில முதல்வராக பொறுப்பேற்றுள்ள பகவந்த் மான் கூறியுள்ளார்.

மாநிலத்தில் 99 சதவீத மக்கள் நேர்மையுடன்தான் இருக்கிறார்கள். மிச்சம் 1 சதவீத மக்களால்தான், மாநில நிர்வாகமே சிதைந்துவிடுகிறது என்றார்.

பகத்சிங் நினைவு நாளில் லஞ்ச ஒழிப்பு உதவி எண் அறிவிக்கப்படும். அதுதான் எனது தனிப்பட்ட வாட்ஸ்ஆப் எண்ணாக இருக்கும். யாராவது உங்களிடம் லஞ்சம் கேட்டால் அதை விடியோவாகவோ ஆடியோவாகவோ எடுத்து எனக்கு அனுப்புங்கள். ஊழலுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பஞ்சாபில் இனி ஊழல் அதிக காலம் இருக்காது என்றும் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரத்தில் லாரி-பேருந்து மோதி கோர விபத்து: 6 பேர் பலி

மேற்கு வங்க ஆளுநர் மீது மேலும் ஒரு பெண் பாலியல் புகார்!

200 விமானங்கள்... சக பயணிகளிடம் கோடிக்கணக்கான நகைகள் திருட்டியவர் கைது!

கட்டுமான நிறுவனங்கள் வழக்கம்போல் பணிகளைத் தொடரலாம்: தொழிலக பாதுகாப்பு இயக்ககம்

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

SCROLL FOR NEXT