அசாமில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் விபத்து: வீரர் பலி
அசாமில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் விபத்து: வீரர் பலிஅசாமில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் நீர்நிலையில் கவிழ்ந்ததில் வீரர் ஒருவர் பலியானார்.
அசாமில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் விபத்து: வீரர் பலி
அசாமில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் நீர்நிலையில் கவிழ்ந்ததில் வீரர் ஒருவர் பலியானார்.
அசாம் மாநிலம், தெற்கு சல்மாரா மங்காச்சார் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் சென்ற வாகனம் திடீரென கட்டுப்பாடை இழந்து ஜௌடாங்கா பகுதியில் உள்ள 20-30 அடி ஆழமான நீர்நிலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த சம்பவத்தில் வீரர் ஒருவர் நீரில் மூழ்கி பலியானார்.
மற்றொருவர் மாயமானார். 3 பேர் நீந்தி கரைக்குத் திரும்பினர். தற்போது வரை ஒரு சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் மாயமானவரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் எல்லைப் பாதுகாப்புப் படை அதிகாரி தெரிவித்தார்.
இதையும் படிக்க- ''இது பெரியார் மண். தமிழக முதல்வர் எங்களுக்கு உதவனும்'': பிரபல திரைப்பட இயக்குநர் கோரிக்கை
இதற்கிடையில், எல்லைப் பாதுகாப்புப் படையின் அதிகாரிகள், மாவட்ட காவல்துறை மற்றும் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.