இந்தியா

பொதுத்தேர்வு: ஏப்.1ல் மாணவர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்

DIN

நடப்பு கல்வியாண்டில் பொதுத்தேர்வு எழுத்தவுள்ள மாணவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி உரையாடுகிறார். 

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்வுக்கு முன்னர் மாணவர்களுடன் கலந்துரையாடும் ‘பரிஷா பே சச்சா’(தேர்வுக்கு தயாராவோம்) என்ற நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. 

கரோனா காரணமாக கடந்த இரு ஆண்டுகள் தேர்வுகள் நடத்த முடியாத சூழ்நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. 

இதையடுத்து பிரதமா் நரேந்திர மோடி மாணவா்களுடன் உரையாற்றும் நிகழ்ச்சி வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் மாணவர்களுடன் ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர்களும் கலந்துகொள்கிறார்கள். தேர்வு பயம், மன அழுத்தத்தைப் போக்க நாடு முழுவதும் உள்ள மாணவர்களுடன் காணொலி வாயிலாக உரையாடவிருக்கிறார். 

கடந்த நான்கு ஆண்டுகளாக மத்திய கல்வித் துறையால் இந்த நிகழ்ச்சி வெற்றிகரமாக நடத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடரும் இஸ்லாமிய வெறுப்புப் பிரச்சாரம்.. சர்ச்சையில் பாஜக!

சிரிப்பே துணை!

1983க்குப் பிறகு மழையே இல்லாத ஏப்ரல்: அனல் பறக்கும் பெங்களூரு

தமிழகத்தில் மே 3 வரை வெப்ப அலை தொடரும்!

சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல்நலக் குறைவு: உணவகத்துக்கு 'சீல்'

SCROLL FOR NEXT