ரிது காந்துரி 
இந்தியா

உத்தரகண்ட்டின் முதல் பெண் பேரவைத் தலைவரானார் ரிது காந்துரி

உத்தரகண்ட் சட்டப்பேரவையின் முதல் பெண் தலைவராக ரிது காந்துரி சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

DIN

உத்தரகண்ட் சட்டப்பேரவையின் முதல் பெண் தலைவராக ரிது காந்துரி சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார்.

நடந்து முடிந்த உத்தரகண்ட் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களைப் பெற்று ஆட்சியமைத்துள்ளது. இதில் கோத்வார் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்ட ரிது காந்துரி முன்னாள் அமைச்சர் எஸ்எஸ் நெகியை விட 3 ஆயிரம் வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார். 

உத்தரகண்ட் முன்னாள் முதல்வரான பிசி காந்தூரியின் மகளான ரிது காந்துரி தற்போது மாநில சட்டப்பேரவைத் தலைவராக பொறுப்பேற்றுள்ளார்.

இதன்மூலம் உத்தரகண்ட் சட்டப்பேரவையின் முதல் பெண் பேரவைத் தலைவர் எனும் பெருமையை அவர் பெற்றுள்ளார். ஏற்கெனவே கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் யம்கேஷ்வர் தொகுதியில் போட்டியிட்டு ரிது காந்துரி வெற்றி பெறுவதற்கு முன்பாக நொய்டாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியுள்ளார். 

சட்டப்பேரவைத் தலைவராக பொறுப்பேற்ற ரிது காந்துரிக்கு முதல்வர் புஷ்கர் சிங் தாமி, எதிர்க்கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

SCROLL FOR NEXT